jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Wednesday, February 1, 2012

hidden ஆன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு

உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.
இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும். அதன்பின் தோன்றும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.
அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். முதலில் start கிளிக் செய்துகொள்ளவும். அதில் run ஜ
open செய்துகொள்ளவும்.
அதில் gpedit.msc என type செய்து பின்னர் ok என கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் user configuration ஐ Double click பண்ணவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Administrative Template என்பதை Double click பண்ணவும், பின் ஓபனாகும் விண்டோவில் system என்பதனை Double click பண்ணவும்.
அதன் பின் Ctl+Alt+Del option என்று உள்ளதை,Double click செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் ஏதாவது ஒன்றில் Double click செய்யவும்.
அதன் பின் Disabled என கிளிக் பண்ணி Apply கொடுக்கவும், பிறகு ok கொடுக்கவும், இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து Right click செய்து பார்த்தால் Task Manager வந்துவிடும்.

இன்டர்நெட் அமைப்பு மாற்றம்

 இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.
நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணணியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க்(Network) அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால்(Internet Protocol) முகவரியும் தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.
IPv4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.
நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.

Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டால் . பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.
1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.
2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும். (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும்-secondary hard disk)
3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.
4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.
5.அங்கு காணப்படும் SAM.exe,SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.
இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச்சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக இயங்கும்.